கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2024-07-07 17:51 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த கால்வாயை கடக்கும் போது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஞானவேல், சிக்கமாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்