சாக்கடை கால்வாய் தூர்வார கோரிக்கை

Update: 2024-05-19 16:15 GMT

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பைபாசில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் வழியில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் முழுவதும் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- கார்த்திகேயன், கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்