கடும் துர்நாற்றம்

Update: 2024-02-25 12:35 GMT

கோவை புலியகுளம் மசால் வீதியில் கழிவுநீர் தேக்க தொட்டி நிரம்பி வழிந்தது. இதனால் சாலையை தோண்டி மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர். ஆனால் முறையாக மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் அந்த தொட்டியில் கசிவு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்