கடும் துர்நாற்றம்

Update: 2024-02-04 12:35 GMT

கோவை மாநகராட்சி 28-வது வார்டு ஆவாரம்பாளையம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்