கால்வாயில் அடைப்பு

Update: 2024-01-28 10:13 GMT

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 60-வது வார்டு சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனி 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கழிவுநீர் சீராக வழிந்தோடுவது இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்