நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-17 12:23 GMT

கோவை மாநகராட்சி 29-வது வார்டு கணபதி புதூர் 1-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற சுகாதாரமின்மையால் நோய் பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்