சுகாதார சீர்கேடு

Update: 2023-12-17 12:23 GMT

பந்தலூர் அருகே நம்பியார்குன்னுவில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீரோடு மழைநீரும் கலந்து ஓடுகிறது. இது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்