கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

Update: 2023-10-29 15:11 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு வாணியர் தெருவில் திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. வாணியர் தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி குறுகிய வளைவு பகுதியாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ராமநாதன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்