கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2023-10-04 17:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை ஊராட்சி புலியானூர் கிராமத்தில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறி உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் அனைத்தும் சாலையிலே தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அன்பரசன், சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்