சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-27 17:22 GMT

மேச்சேரியின் எல்லை பகுதியான மேட்டூர் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாராததால் கழிவுநீர் அடைத்து சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மீது சாக்கடைநீர் விழுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரை, மேச்சேரி.

மேலும் செய்திகள்