ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் குமரன்நகரில் சாக்கடை வசதி கிடையாது. இதனால் குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும்,, குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.