நிக்கல்சன் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2026-07-19 19:46 GMT

வேலூர் மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட தோட்டப்பாளையத்தில் ஓடும் நிக்கல்சன் கானாறு தூர்வாரவில்லை. இதனால், மாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள நிக்கல்சன் கால்வாய் மீது உயரத்தை குறைத்து, அதன் மீது சிறுபாலம் அமைக்கப்பட்டதால் மழைக் காலத்தில் வெள்ளம் எளிதில் வடிவதில்லை. அனைத்துத் தெருக்களிலும் மழைநீர் தேங்கி வடியாமல் மழைநீரும், கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்து அனைத்து உடைமைகளும் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது. எனவே நிக்கல்சன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, வேலூர்.

மேலும் செய்திகள்