கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாதள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.