திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ் நகர் 6-வது பிரதான வீதியில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதுடன், கழிவுநீரும் முறையாக தூய்மைப்படுத்தப்படாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே வடிகால் அமைப்பை சீரமைத்து கழிவுநீரை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.