உடுமலை ஜெய்லானி காலனி பகுதியில்,கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் நீண்ட கால பயன்பாட்டின் காரணமாக சேதம் அடைந்தது. அதற்கு பதிலாக புதிதாக கட்டித் தரும்படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்டது. அது சரியாக கட்டப்படாததால் சமீபத்தில் மீண்டும் சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமா அங்கு சுகாதார சீ்ர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.