கழிவுநீர் வடிகால் தூர்வாப்படுமா?

Update: 2026-09-13 18:59 GMT

திருச்சி மேலபுதூர் சுரங்கப்பாதை பகுதியில் கழிவுநீர் வடிகாலின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, வடிகாலை தூர்வாரி மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்