தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2026-07-19 17:47 GMT

காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் கரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், இந்த பஸ் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், சுற்றுவட்டார குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை வெளியேற்ற பஸ் நிலையம் வழியாக கால்வாய் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் முைறயாக தூர்வாரப்படாமல் இருப்பதால், அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவை கால்வாயில் அடைப்பை ஏற்படுத்துக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காங்கயம் பஸ் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்