திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லுர் ஒன்றியம் வேப்பம்பட்டு கிராமத்தில் ஏரி நீர் கால்வாய், உபரிநீர் கால்வாய் ஆகியவை தூர்ந்து போய் விட்டது. இதனால் கால்வாய்களில் நீரோட்டம் தடைபடுகிறது. அவைகளை விவசாயிகள் சிலர் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். தூர்ந்துபோய் கிடக்கும் ஏரி கால்வாய், உபரிநீர் கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபிரகாஷ், பெரணமல்லூர்.