தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தி

Update: 2023-09-20 18:04 GMT

கலவை பேரூராட்சி 4-வது வார்டில் அப்பாதுரைப்பேட்டை-நல்லூர் செல்லும் சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சமூக ஆர்வலர், கலவை.

மேலும் செய்திகள்