முழுமை பெறாத கால்வாய் பணி

Update: 2022-08-12 11:25 GMT

வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் தடுப்பு கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கான்கிரீட் சுவர் முழுமை பெறாமல் சிறிது தூரம் விட்டு விட்டனர். அந்தப் பகுதி வளைவு பகுதி என்பதால் இரவில் வாகனங்களில் செல்ேவார் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து விடுவோமோ எனப் பயப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசன், வேலூர்

மேலும் செய்திகள்