சுகாதார சீர்கேடு

Update: 2024-04-07 17:30 GMT

வேலூர் நகரின் முக்கிய வணிக மையமாக வேலூர் மண்டித்தெரு உள்ளது. அங்குள்ள குடோன், கடைகளில் இருந்து தான் பிற பகுதிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன. மண்டித்தெருவில் கழிவறை வசதி இல்லாததால் சிலர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் அருகே சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சேகர், தோட்டப்பாளையம்.

மேலும் செய்திகள்