சாலையில் ஓடிய கழிவு நீரால் பக்தர்கள் அவதி

Update: 2023-09-13 12:19 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே உள்ள வட ஒத்தவாடை தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கோபுரம் முன்புறம் வழியாக சாலையில் ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் மட்டுமின்றி பக்தர்களும் அவதி அடைந்தனர். இதேபோல் அடிக்கடி இந்தப் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்