கால்வாய் வசதி தேவை

Update: 2023-08-20 17:30 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு ரோட்டில் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் அப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் தங்களது வீட்டுக்கு வெளியே கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்