திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய பஸ் நிலையம்

Update: 2023-01-08 16:17 GMT

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா சிறுநீர் கழிப்பகம் இல்லாததால் சென்னை பஸ் நிறுத்தம் இடத்தின் பின்பக்கம் காலியாக உள்ள இடத்தில் ஆண்களும், ஆளில்லாத நேரங்களில் பெண்களும் சிறுநீர் கழித்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் சென்னை செல்லக்கூடிய பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்ததும் துர்நாற்றத்துக்கு ஆளாகின்றனர். பஸ்சில் சிறிது நேரமே அமரும் அவல நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-முத்துராஜா, ஆரணி. 

மேலும் செய்திகள்