உடைந்து கிடக்கும் கால்வாய் மூடி

Update: 2024-03-17 16:55 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி உள்ளது. அங்கு பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக கால்வாய் மேற்பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கால்வாய் மேலே போடப்பட்ட சிமெண்டு சிலாப் மூடி உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இரவில் அந்த வழியாக வரும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் கால்வாய் சிமெண்டு மூடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்