மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எடத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடத்தெரு மக்கள் மயிலாடுதுறை.