நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 69-வது வார்டில் பொது கழிப்பிடம் உள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் பல நாட்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பொதுகழிப்பிடம் அருகில் 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன. எனவே பொது கழிப்பிடத்தை சீரமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.