மூடப்படாத கழிவுநீர் குழி

Update: 2022-08-20 16:40 GMT

நாமக்கல் மாவட்டம் வீசாணம் கிராமத்தில் உள்ள நூலகத்தில் கழிவுநீர் தேக்க தொட்டி குழி தோண்டப்பட்டு மூடாமல் உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், குழந்தைகள் அந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தான கழிவுநீர் தொட்டியை மூடி வைக்குமாறு வீசாணம் ஊராட்சிமன்ற தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூடினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

-ராமு, வீசாணம், நாமக்கல்.

மேலும் செய்திகள்