கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-08-13 14:50 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . கோவிலுக்கு சொந்தமான குளம் அருகில் உள்ளது. குளத்தின் அருகே உள்ள வாய்க்காலில் தற்போது கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வலங்கைமான்.

மேலும் செய்திகள்