சேலம் நகரில் உள்ள தெருக்களிலும், சாலையோரங்களிலும் வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தெருக்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-பாண்டியன், சேலம்.