சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-11 17:26 GMT

நாமக்கல் நகரில் உள்ள தெருக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தெருக்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதால் மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்