கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, சேலம் சாலை, பெங்களூரு சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது ரபிக், கிருஷ்ணகிரி.