மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலைய வளாகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள மயிலாடுதுறை சாலை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சீர்காழி.