சேலம் 4 ரோடு பெரமனூர் ஹவுசிங் போர்டில் உள்ள சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், சேலம்.