தஞ்சாவூர் மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டப வாசல் அருகே கடந்த சில நாட்களாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரம் புதிய சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை