கழிவுநீர் வெளியேறுவது தடுக்கப்படுமா?

Update: 2023-09-13 13:50 GMT


நாகை புதிய பஸ் நிலையம் அருகே காரைக்கால் செல்லும் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்