ஆற்றுநீர் மாசுபடுகிறது

Update: 2023-07-12 15:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியே மத்தூர் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மத்தூர் நகரின் கழிவு வாய்க்கால் நேரடியாக கலக்கும்படி செய்யப்பட்டுள்ளதால் நகரின் கழிவுநீர் நேரடியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் மத்தூர் ஆற்றில் கலக்கிறது. மேலும் நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், வண்டிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஆற்றில் கொட்டப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மத்தூர் ஆற்றில் உள்ள நீர் மாசு படுவதுடன் நோய் பரவும் வித்திடுகிறது. எனவே ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.

-கோபால், மத்தூர்.

மேலும் செய்திகள்