பொதுமக்கள் அவதி

Update: 2023-06-28 16:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி சுற்று வட்டாரங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு மற்றும் கெட்டுப்போன மாம்பழங்களை ஆங்காங்கே சாலையோரத்தில் இரவு நேரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாங்கூழ் தொழிற்சாலை கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில்கொட்டி அவற்றை இயற்கை உரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-கண்ணபிரான், மத்தூர்.

மேலும் செய்திகள்