கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2023-06-21 17:30 GMT

கிருஷ்ணகிரியில் உள்ள கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியை சுற்றி வங்கிகள், பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு 2-வது பேஸ் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு நோய் தொல்லை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மோகன் ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்