நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-14 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் செங்கல் சூளைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை ஒழுங்கப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மனோகரன், எருமப்பட்டி.

மேலும் செய்திகள்