தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-07 13:26 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் ஊராட்சியில் கூட்டுறவு சங்கத்தின் பின்புறம் உள்ள கருவேலம்காடுகளில் பன்றிகள் செத்துகிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செத்த பன்றிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜேந்திரன் திருக்கடையூர்.

மேலும் செய்திகள்