சுகாதார வளாகம் வேண்டும்

Update: 2023-06-04 15:42 GMT

தர்மபுரி நகராட்சி 25-வது வார்டு எஸ்.வி. ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுகாதார வளாகம் இல்லை. இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, தர்மபுரி.

மேலும் செய்திகள்