கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2023-05-21 17:54 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வெள்ளை பிள்ளையார் கோவில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. ஆஸ்பத்திரி நுழைவுவாயில் அருகே சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளை மாற்றுப் பாதையில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு போதிய அறிவிப்பு இல்லை. எனவே நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறாமல் திரும்பி செல்கின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சசிகுமார், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்