சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-05-07 17:35 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா ஆலம்பட்டி பகுதியில் இருந்து மேட்டு மிஷின் செல்லும் சாலையில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து வீடுகிறது. மேலும் ஆலம்பட்டி ஊர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்