வங்கியில் கழிப்பறை வசதி

Update: 2023-04-30 18:05 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மாதத்தின் முதல்வாரத்தில் மூத்தகுடிமக்கள் ஏராளமானோர் பணம் எடுக்க வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க வசதி இல்லை. மேலும் வெளியே வர முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வங்கிக்கு வரும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பக்தவத்சலம், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்