கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-04-30 18:03 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் முறையான கழிவுநீர் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்