கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-04-19 14:58 GMT


நாகை மறைமலைநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற வேண்டும்

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்