கழிவு நீர் அகற்றப்படுமா?

Update: 2023-04-19 13:26 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆக்கூர் அருகே ஊரின் நடுவில் இரட்டை குளம் என்ற இரண்டு குளம் உள்ளது. இந்த இரட்டை குளத்தில் மயிலாடுதுறை நகராட்சியால் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் சத்தியவனான்வாய்க்கால் வழியாக இந்த இரட்டை குளத்தில் சேகரிக்கப்படுகிறது., இதனால் எப்போதும் துர்நாற்றம், ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்