கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-04-16 11:30 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம் கிராமம் வடக்கு தெருவிலிருந்து அக்ரஹாரம், கணபதி நகர் மற்றும் ஆற்றங்கரைத் தெரு செல்லும் பாதையில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கழிவு நீர் சாலையில் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சீர்காழி.

மேலும் செய்திகள்