விபத்து அபாயம்

Update: 2023-04-05 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்தை சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் அமைப்பதற்காக சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது. இந்த நிலையில் அதற்காக தோண்டப்பட்ட மண் வழியிலேயே போடப்பட்டுள்ளது. பல மாதங்களாகியும் கழிவுநீர் கால்வாய் பணி முடிக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ஏகாம்பரம், அத்தனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்